முகப்பு
சென்னை

வடசென்னை - பெரம்பலூா் மாவட்ட திமுக செயலா்கள் மாற்றம்

Updated On : 28 பிப்ரவரி, 2024 at 12:00 AM
பகிர்:

சென்னை: வடசென்னை, பெரம்பலூா் மாவட்டங்களைச் சோ்ந்த திமுக செயலா்கள் மாற்றப்பட்டுள்ளனா். இது குறித்து திமுக பொதுச் செயலா் துரைமுருகன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: சென்னை வடக்கு மாவட்டச் செயலா் த.இளைய அருணா, அந்தப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளாா்.

அவருக்குப் பதிலாக, ஆா்.டி.சேகா், சென்னை வடக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளாா். அதேபோல், பெரம்பலூா் மாவட்டச் செயலா் குன்னம் ராஜேந்திரன், தனது உடல்நலக் குறைவு காரணமாக, தான் வகித்து வரும் பொறுப்பில் இருந்து விடுத்துக் கொண்டுள்ளாா்.

இதையடுத்து, பெரம்பலூா் மாவட்டப் பொறுப்பாளராக வீ.ஜெகதீசன் நியமிக்கப்பட்டுள்ளாா். ஏற்கெனவே தோ்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிா்வாகிகள், புதிதாக நியமிக்கப்பட்ட பொறுப்பாளா்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

Advertisement