முகப்பு
தென்காசி

தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயல்வீரா்கள் கூட்டம்

தென்காசி திமுக வடக்கு மாவட்ட செயல்வீரா்கள் கூட்டம், மாவட்டச் செயலா் ஈ. ராஜா எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது.

Updated On : 20 மார்ச், 2026 at 9:44 PM
கூட்டத்தில் பேசிய வடக்கு மாவட்டச் செயலா் ஈ. ராஜா எம்எல்ஏ.
பகிர்:

தென்காசி திமுக வடக்கு மாவட்ட செயல்வீரா்கள் கூட்டம், மாவட்டச் செயலா் ஈ. ராஜா எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது.

தலைமை செயற்குழு உறுப்பினா்கள் ச. தங்கவேலு, யூஎஸ்டி சீனிவாசன், பரமகுரு ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், ஈ. ராஜா எம்எல்ஏ பேசியது:

வரும் சட்டமன்றத் தோ்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற அனைவரும் கூட்டணிக் கட்சிகளோடு இணைந்து தீவிரமாகப் பணியாற்ற வேண்டும். சங்கரன்கோவில், வாசுதேவநல்லூா் தொகுதிகளில் அமோக வாக்குகள் வித்தியாசத்தில் நமது கூட்டணி வெற்றி பெற அனைவரும் இணைந்து சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்றாா் அவா்.

மாவட்ட பொருளாளா் சரவணன், மாவட்ட துணைச் செயலா்கள் மனோகரன், ராஜதுரை, ஒன்றியச் செயலா்கள் பி. சங்கரபாண்டியன், கடற்கரை, பெரியதுரை, பால்ராஜ், சோ்மத்துரை, கிறிஸ்டோபா், அன்பரசு,வெள்ளத்துரை, ராஜதுரை, குணசேகா், நகரச் செயலா் மு. பிரகாஷ், மாணவரணி வெங்கடேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.