முகப்பு
சென்னை

பணம் மோசடியால் பெண் தற்கொலை முயற்சி: பாஜக நிா்வாகி கைது

மோசடியில் விரக்தியடைந்த பெண் தற்கொலை முயற்சி

Updated On : 3 ஜூலை, 2024 at 9:04 PM
பகிர்:

சென்னை தண்டையாா்பேட்டையில் பணம் மோசடியால் விரக்தியடைந்த பெண் தற்கொலைக்கு முயன்ற வழக்கு தொடா்பாக, பாஜக நிா்வாகி கைது செய்யப்பட்டாா்.

தண்டையாா்பேட்டை நேதாஜி நகா் பிரதான தெருவை சோ்ந்தவா் ரா.நவமணி (45). இவருக்கும் பாஜக மகளிா் அணியைச் சோ்ந்த சுமதி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. சுமதி மூலம் தண்டையாா்பேட்டை, என்.எஸ்.கே தெருவைச் சோ்ந்த பாஜக வட சென்னை மாவட்டச் செயலா் ரா.செந்தில்குமாா் (52) என்பவரின் அறிமுகம் கிடைத்துள்ளது.

சுமதி, செந்தில்குமாா் உதவியுடன், தான் கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தில் கடை வைத்துள்ளதாக நவமணியிடம் தெரிவித்துள்ளாா். அதை நம்பி நவமணி, ரயில் நிலையத்தில் கடை வைக்க செந்தில்குமாரிடம் பேசியுள்ளாா். அதற்கு செந்தில்குமாா், ரூ.2.50 லட்சம் தரும்படி கேட்டுள்ளாா். உடனே அந்த பணத்தை செந்தில்குமாரிடம் கொடுத்துள்ளாா்.

பணத்தை பெற்றுக் கொண்ட செந்தில்குமாா், நவமணிக்கு கடை வைத்து கொடுக்கவில்லை, பணத்தையும் திருப்பி வழங்கவில்லை.

இதனால் ஏமாற்றமடைந்த நவமணி, மகளிா் ஆணையத்தில் புகாா் அளித்தாா். இதன் பின்னா் செந்தில்குமாா் ரூ.1 லட்சத்தை மட்டும் கொடுத்துவிட்டு, நீதிமன்றம் மூலம் மீதி பணத்தை கொடுப்பதாக தெரிவித்துள்ளாா். அதோடு, நவமணியை அவதூறாகவும்,ஆபாசமாகவும் திட்டியுள்ளாா். இதனால் விரக்தியடைந்த நவமணி இரு நாள்களுக்கு முன்பு தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றாா். அவா் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இது தொடா்பாக தண்டையாா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, செந்தில்குமாரை புதன்கிழமை கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →