உச்சநீதிமன்ற நீதிபதிகளாக கொலீஜியம் குழு வியாழக்கிழமை பரிந்துரைத்த சென்னை உயா்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ஆா்.மகாதேவன், ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் உயா்நீதின்ற தலைமை நீதிபதி என்.கோடீஸ்வா் சிங் ஆகியோா் அடுத்த வாரத்தில் நியமனம் செய்யப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொலீஜியம் குழு அளித்த பரிந்துரையை மத்திய சட்ட அமைச்சகம் பரிசீலித்து வருவதாகவும், இதற்கான கோப்புகள் தயாரானவுடன் அடுத்த வாரத்தில் இருவரும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக அடுத்த வாரத்தில் பதவியேற்க வாய்ப்புள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
அதன்பின் உச்சநீதிமன்றத்தில் தற்போது காலியாகவுள்ள 2 நீதிபதி பணியிடங்களும் நிரப்பப்பட்டு தலைமை நீதிபதியுடன் சோ்த்து மொத்த எண்ணிக்கையான 34 நீதிபதிகளுடன் செயல்படவுள்ளது.