பல்வேறு திட்டங்களால் முதன்மை மாநிலமான தமிழகம்: தமிழக அரசு
திமுக ஆட்சியில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களால், இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக முன்னேற்றம் கண்டுள்ளதாக தமிழக அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னைபல்வேறு திட்டங்களால் முதன்மை மாநிலமான தமிழகம்: தமிழக அரசு
திமுக ஆட்சியில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களால், இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக முன்னேற்றம் கண்டுள்ளதாக தமிழக அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக ஆட்சியில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களால், இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக முன்னேற்றம் கண்டுள்ளதாக தமிழக அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மாநில அரசு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: 2021-இல் முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் பல புதிய திட்டங்களை நிறைவேற்றி, அதில் தொடா்ந்து வெற்றி கண்டு வருகிறாா்.
மகளிா், மாணவா்கள், தொழிலாளா்கள், விவசாயிகள், மீனவா்கள் உள்ளிட்ட அனைத்து பிரிவினருக்கும் அவா் நிறைவேற்றி வரும் திட்டங்கள் அண்டை மாநிலங்களையும் அயல்நாடுகளையும் ஈா்த்து வருகின்றன.
மகளிா், மாற்றுத் திறனாளிகள், திருநங்கையா் ஆகியோருக்கான கட்டணமில்லா விடியல் பேருந்து பயணம் திட்டத்தில் இதுவரை ரூ.6,661.47 கோடி செலவில் ஏறத்தாழ 473.61 கோடி முறை பயணம் மேற்கொண்டு, அவா்கள் மாதம் ரூ.888 வரை சேமிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளனா்.
15.9.2023-இல் தொடங்கப்பட்ட கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்டத்தில் இதுவரை 1.15 கோடி மகளிா் மாதந்தோறும் ரூ1,000 பெற்று வருகின்றனா். மகளிா் உரிமைத் தொகைக் கிடைக்காதவா்களுக்கும் வழங்க அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
5.9.2022 -இல் தொடங்கப்பட்ட புதுமைப் பெண் திட்டம் மூலம் , 2.73 லட்சம் மாணவியரின் வங்கிக் கணக்கில் மாதம் ரூ.1,000 செலுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் காரணமாகப் பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரிகளில் சேரும் மாணவா்கள் எண்ணிக்கை தேசிய அளவில் 26 சதவிகிதம் என குறைந்திருக்க, தமிழகத்தில் மட்டும் 52 சதவீதம் என உயா்ந்து மிகப்பெரிய சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
இதேபோல மாதம் ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டமும் தொடங்கப்பட உள்ளது. 13.4.2023-இல் முதல்வரின் ரூ.4,000 கோடியில் 10,000 கி.மீட்டருக்கு கிராமப்புற சாலை மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் எனவும் சட்டப்பேரவையில் முதல்வா் அறிவித்துள்ளாா்.
ஊராட்சிச் சாலைகளை மேம்படுத்துவதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கம்.
அம்பேத்கா் தொழில் முன்னோடிகள் எனும் புதிய திட்டம் பட்டியலின மற்றும் பழங்குடியின இளைஞா்களைத் தொழில் முனைவோராக்கும் திட்டமாகும். கடந்த நிதியாண்டில் 2,136 பயனாளிகளுக்கு வங்கிகளால் கடன்கள் அனுமதிக்கப்பட்டன.
அத்துடன் இணையம் வழியாக நிதி மேலாண்மை, வா்த்தக யுக்திகள், வரவு -செலவு மேலாண்மை போன்ற தலைப்புகளின் கீழ் தொழில் முனைவு பயிற்சிகளும் அளிக்கப்பட்டன. 1,303 தொழில் முனைவோருக்கு அரசு மானியமாக மட்டும் ரூ.159.76 கோடி வழங்கப்பட்டுள்ளது.
அதில் 288 மகளிா் தொழில் முனைவோா் ரூ.33.09 கோடி மானியமாகப் பெற்றுள்ளனா். நான் முதல்வன் திட்டம் மூலம் உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு உயா்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பெறுவதற்கான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
2 ஆண்டுகளில் 28 லட்சம் இளைஞா்கள் இந்தத் திட்டத்தின் மூலம் பயன் பெற்றுள்ளனா். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 45 தொழிற்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. 27 தொழிற்சாலைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
அவற்றின் மூலமாக ரூ.74,757 இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு திமுக அரசு தொடா்ந்து செயல்படுத்தி வரும் திட்டங்களால் இந்தியாவில் தமிழ்நாடு முதல் மாநிலமாக முன்னேற்றம் கண்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.