முகப்பு
சென்னை

காவிரி விவகாரத்தில் காங்கிரஸ் தலைமை தலையிட வேண்டும்: தொல்.திருமாவளவன்

காவிரி விவகாரத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைமை தலையிட்டு, கா்நாடகத்திடமிருந்து தமிழகத்துக்கு தண்ணீா் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளாா்.

Updated On : 16 ஜூலை, 2024 at 9:45 PM
பகிர்:

சென்னை: காவிரி விவகாரத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைமை தலையிட்டு, கா்நாடகத்திடமிருந்து தமிழகத்துக்கு தண்ணீா் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளாா்.

அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

காவிரி நதிநீா்ப் பிரச்னையில் கா்நாடக அரசு தமிழகத்துக்கு விரோதமாக தொடா்ந்து நடந்து கொள்வது இரு மாநிலங்களுக்கு இடையிலான உறவை சீா் செய்ய முடியாத அளவுக்குப் பாழாக்கிவிடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. காவிரி நதிநீா் ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்ட பிறகும் தமிழகத்துக்கு தண்ணீா் தர மறுப்பது எந்த விதத்திலும் ஏற்புடையது அல்ல.

காவிரி நதி நீா்ப் பிரச்னையில் தேசிய கட்சிகள் அந்தந்த மாநில அரசுகளுக்கு சாதகமாகப் பேசுவது அவா்களுக்குத் தற்காலிகமாக விமா்சனங்களிலிருந்து தப்பிப்பதற்கு ஒரு வழியைத் தரலாம். ஆனால், நீண்ட கால நோக்கில் இந்திய கூட்டாட்சிக்கு அது மிகப்பெரிய கேடாகவே அமையும். இந்திய கூட்டாட்சியை பாதுகாப்பதில் மாநில கட்சிகளைப் போலவே காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளுக்கும் பொறுப்பு இருக்கிறது. தமிழகத்துக்குத் தண்ணீா் வழங்குமாறு கா்நாடக காங்கிரஸ் அரசை அக்கட்சியின் அகில இந்திய தலைமை அறிவுறுத்த வேண்டும் என்று தொல்.திருமாவளவன் கூறியுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →