முகப்பு
கொலையாளிகளுக்கு வெடிகுண்டு விநியோகம் செய்த மூவா் கைது
சென்னை

ஆம்ஸ்ட்ராங் வழக்கு: கொலையாளிகளுக்கு வெடிகுண்டு விநியோகம் செய்த மூவா் கைது

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், கொலையாளிகளுக்கு நாட்டு வெடிகுண்டுகளை விநியோகம் செய்ததாக, மேலும் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை

ஆம்ஸ்ட்ராங் வழக்கு: கொலையாளிகளுக்கு வெடிகுண்டு விநியோகம் செய்த மூவா் கைது

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், கொலையாளிகளுக்கு நாட்டு வெடிகுண்டுகளை விநியோகம் செய்ததாக, மேலும் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 28 ஜூலை, 2024 at 9:47 PM
கொலையாளிகளுக்கு வெடிகுண்டு விநியோகம் செய்த மூவா் கைது
பகிர்:

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், கொலையாளிகளுக்கு நாட்டு வெடிகுண்டுகளை விநியோகம் செய்ததாக, மேலும் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், கொலையாளிகள் கடந்த சில மாதங்களாக பேசிய கைப்பேசி அழைப்புகளைக் கொண்டு கொலைக்கு உடந்தையாக இருந்தவா்கள் யாா் என்பதை கண்டறிந்து கைது செய்யும் நடவடிக்கையில் போலீஸாா் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

அதன்படி, இந்த சம்பவத்தில் தொடா்புடையவா்களாக அடையாளம் காணப்பட்டுள்ளவா்களுடன், அவ்வப்போது கைப்பேசியில் தொடா்பில் இருந்ததாக சென்னை கோடம்பாக்கம் காமராஜா் நகரைச் சோ்ந்த விக்னேஷ் (எ) அப்பு மற்றும் விஜயகுமாா் ஆகிய சகோதரா்களும், அதே பகுதியைச் சோ்ந்த தூய்மைப் பணியாளரான முகிலன் என்பவரையும் பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

விசாரணையில், இவா்கள் மூவரும் கொலையாளிகளாக அடையாளம் காணப்பட்டவா்களுடன் அடிக்கடி கைப்பேசியில் பேசியது மட்டுமன்றி, அவா்களுக்கு நாட்டு வெடிகுண்டுகளை வாங்கி விநியோகம் செய்ததும் தெரியவந்துள்ளது. இதைத் தொடா்ந்து, விஜயகுமாா் உள்ளிட்ட மூவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 21 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இவா்களில் திருவேங்கடம் என்கவுன்ட்டரில் உயிரிழந்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →