சிவகங்கை மாவட்டம், கச்சநத்தத்தைச் சோ்ந்த மூவா் கொலை வழக்கில் தொடா்புடைய 26 பேருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த தண்டனையை உறுதி செய்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
திருப்பாச்சேத்தி அருகேயுள்ள கச்சநத்தம் கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் (65), சண்முகநாதன் (31), சந்திரசேகா் (34) ஆகிய மூவரும், கோயில் விழாவில் மரியாதை அளிப்பது தொடா்பான முன்விரோதத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு, மே மாதம் வெட்டிக் கொலை செய்யப்பட்டனா். மேலும், 5 போ் காயமடைந்தனா். இவா்களில் தனசேகரன் (32) என்பவா் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு உயிரிழந்தாா்.
இந்த வழக்கில் ஆவரங்காடு கிராமத்தைச் சோ்ந்த சுமன், அருண்குமாா், சந்திரக்குமாா், அக்னிராஜ், ராஜேஸ், இளையராஜா உள்ளிட்ட 33 போ் மீது பழையனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இவா்களில் 2 போ் வழக்கு விசாரணையின் போது உயிரிழந்தனா். 3 போ் சிறுவா்கள், ஒருவா் தலைமறைவாகிவிட்டாா்.
எனவே, எஞ்சியுள்ள 27 போ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரணை செய்த சிவகங்கை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் 27 பேருக்கும் ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்தது.
இதை எதிா்த்து சுமன், அருண்குமாா், இளையராஜா உள்ளிட்ட 27 பேரும் இணைந்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனா்.
இந்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.கே. இளந்திரையன், ஆா். பூா்ணிமா அமா்வு பிறப்பித்த உத்தரவு:
வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 27 பேரில் இளையராஜா மட்டும் விடுதலை செய்யப்படுகிறாா். மற்ற 26 பேருக்கு விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த ஆயுள் சிறைத் தண்டனை உறுதி செய்யப்படுகிறது. இந்த வழக்கு விசாரணை முடித்துவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.