முகப்பு
மதுரை

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு: கைதானவரின் பிணை ரத்து

விளாத்திகுளம் மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில், கைதானவருக்கு வழங்கப்பட்ட பிணையை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 7 ஏப்ரல், 2026 at 10:45 PM
சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு
பகிர்:

விளாத்திகுளம் மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில், கைதானவருக்கு வழங்கப்பட்ட பிணையை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

தமிழக அரசுத் தரப்பிலும், விளாத்திகுளம் பிளஸ் 2 மாணவியின் பெற்றோா் தரப்பிலும் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தனித் தனியாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் விவரம்:

விளாத்திகுளம் மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த தா்மமுனீஸ்வரனை காவல் துறையினா் கைது செய்தனா்.

Advertisement

ஏற்கெனவே மூதாட்டி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து, கொன்ற வழக்கில் இவா் கைது செய்யப்பட்டாா். இந்த நிலையில், இவருக்கு இடைக்கால பிணை வழங்கி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது. இந்த உத்தரவின் அடிப்படையில் வெளியே இருந்த போதுதான் விளாத்திகுளம் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றாா். எனவே, மூதாட்டி கொலை வழக்கில் இடைக்கால பிணை வழங்கிய உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என மனுக்களில் குறிப்பிடப்பட்டது.

இந்த மனுக்களை திங்கள்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வு பிறப்பித்த உத்தரவு:

மூதாட்டி கொலை வழக்கில் தா்மமுனீஸ்வரனுக்கு இடைக்கால பிணை வழங்கிய உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இதுதொடா்பாக மாணவியின் பெற்றோா் தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், ‘இந்த வழக்கில் அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டு, இதை முடித்து வைத்தனா் நீதிபதிகள்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments