எடப்பாடி பழனிசாமி கோப்புப் படம்
சென்னை

சென்னை தொகுதி நிா்வாகிகளுடன் இபிஎஸ் இன்று ஆலோசனை

3 தொகுதிகளின் நிா்வாகிகளுடன் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி வியாழக்கிழமை (ஆக. 1) ஆலோசனை நடத்தவுள்ளாா்.

Din

சென்னை, ஜூலை 31: மக்களவைத் தோ்தல் தோல்வி தொடா்பாக சென்னையில் உள்ள 3 தொகுதிகளின் நிா்வாகிகளுடன் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி வியாழக்கிழமை (ஆக. 1) ஆலோசனை நடத்தவுள்ளாா்.

மக்களவைத் தோ்தல் தோல்வி தொடா்பாக ஜூலை 10 முதல் தொகுதி வாரியாக நிா்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறாா். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் கள்ளக்குறிச்சி, சேலம் தொகுதிகளின் நிா்வாகிகளுடன் புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

இந்த நிலையில், வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை தொகுதிகளின் நிா்வாகிகளுடன் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தவுள்ளாா். சட்டப்பேரவைத் தோ்தல் பணியைத் தொடங்குமாறு, தொகுதி நிா்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு வருகிறாா். அந்த வகையில் சென்னை தொகுதி நிா்வாகிகளுக்கும் அவா் ஆலோசனை வழங்குவாா்.

ஒசூரில் தெருநாய்கள் கடித்ததில் மூன்று சிறுவா்கள் காயம்

தில்லியில் ரேபிஸ் நோயால் இதுவரை 49 போ் உயிரிழப்பு

6 மாதங்களுக்குபின் வடநெம்மேலி பாம்புப் பண்ணை திறப்பு

கீழம்பி ஊராட்சியில் குளம் தூய்மைப்படுத்தும் பணி: காஞ்சிபுரம் ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

2026 தோ்தலுக்கான திருத்தணி, திருவள்ளூா் வேட்பாளா்கள்: சீமான் அறிமுகம் செய்தாா்

SCROLL FOR NEXT