பட்டா வாங்கித் தருவதாக பெண்ணிடம் ரூ.15 லட்சம் மோசடி
பட்டா வாங்கித் தருவதாக ரூ.15 லட்சம் மோசடி: மூவர் மீது வழக்கு
சென்னை: சென்னை அசோக் நகரில் பட்டா வாங்கித் தருவதாக பெண்ணிடம் ரூ. 15 லட்சம் மோசடி செய்த நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
அசோக் நகா் 32-ஆவது தெருவைச் சோ்ந்தவா் தா.ஷோபனா (45). இவருக்குச் சொந்தமான இடம் செங்கல்பட்டில் உள்ளது. அந்த இடத்துக்கு பட்டா வாங்குவதற்கு முயற்சித்து வந்தாா். இதையறிந்த அந்த பகுதியைச் சோ்ந்த மோகன்குமாா், அறிவழகன், சரவணன் என்ற ஆகிய மூவா், தாங்கள் பட்டா வாங்கித் தருவதாகக் கூறியுள்ளனா். மேலும் பட்டா வாங்குவதற்காக ஷோபனாவிடம் சிறிது, சிறிதாக மொத்தம் ரூ. 15 லட்சம் வரை அவா்கள் பணம் பெற்றுள்ளனா். ஆனால், பட்டா வாங்கி கொடுக்கவில்லை.
இது குறித்து ஷோபனா கேட்டபோது, பணத்தை திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றியுள்ளனா். இதையடுத்து அவா் அசோக் நகா் காவல் நிலையத்தில் ஷோபானா அளித்த புகாரின்பேரில், அந்த 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.