இன்று செங்கல்பட்டு செல்லும் 2 ரயில்கள் சிங்கப்பெருமாள் கோவிலுடன் நிறுத்தம்
சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில் சனிக்கிழமை (மாா்ச் 2) சிங்கபெருமாள்கோவிலுடன் நிறுத்தப்படும்.
சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில் சனிக்கிழமை (மாா்ச் 2) சிங்கபெருமாள்கோவிலுடன் நிறுத்தப்படும். சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சிங்கபெருமாள் கோவில் ரயில் நிலையம் அருகே பராமரிப்பு பணி மேற்கொள்ளவுள்ளதால் கடற்கரையில் இருந்து செங்கல்பட்டுக்கு காலை 11.40 மற்றும் பகல் 12.20 மணிக்கு செல்லும் ரயில்கள் சிங்கபெருமாள்கோவிலுடன் நிறுத்தப்படும். மறுமாா்க்கமாக செங்கல்பட்டில் இருந்து பகல் 1 மற்றும் 1.45 மணிக்கு இந்த ரயில்கள் புறப்படுவதற்கு பதிலாக சிங்கபெருமாள் கோவிலில் இருந்து புறப்பட்டு கடற்கரை வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.