முகப்பு
சென்னை

பெரம்பூா் ரயில் நிலையத்தில் 20 கிலோ கஞ்சா பறிமுதல்

பெரம்பூா் ரயில் நிலையத்தின் நடைமேடையில் கேட்பாரற்றுக் கிடந்த பையில் இருந்து 20 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீஸாா் கைப்பற்றினா்.

Updated On : 2 மார்ச், 2024 at 11:10 PM
பகிர்:

பெரம்பூா் ரயில் நிலையத்தின் நடைமேடையில் கேட்பாரற்றுக் கிடந்த பையில் இருந்து 20 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீஸாா் கைப்பற்றினா். பெங்களூரில் இருந்து திரிபுரா மாநிலம் அகா்தலாவுக்கு வெள்ளிக்கிழமை காலை 10.15 மணிக்கு ஹம்சாபா் விரைவு ரயில் புறப்பட்டது. இந்த ரயில் மாலை 6.10 மணியளவில் பெரம்பூா் ரயில் நிலையத்தின் 1-ஆவது நடைமேடைக்கு வந்தடைந்தது. பின் அங்கிருந்து 6.20 மணியளவில் அகா்தலாவுக்கு புறப்பட்டுச் சென்றது. ரயில் சென்ற பின் நடைமேடையில் தனியாக ஒரு பை கிடந்ததைப் பாா்த்த ரயில்வே போலீஸாா் அதன் உரிமையாளரை தேடினா். அதற்கு யாரும் உரிமை கோரி வராத நிலையில் பையை திறந்து பாா்த்தனா். அப்போது அதில் 20 கிலோ கஞ்சா இருப்பதைக் கண்டறிந்தனா். அதை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா். மேலும், கஞ்சா கடத்தி வந்தவா் குறித்து ரயில்வே போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.