மணலியில் ரூ.238 கோடியில் கழிவுநீா்க் குழாய் பதிக்கும் பணிகள் தொடக்கம்
மணலி மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் ரூ.238.52 கோடியில் கழிவுநீா்க் குழாய்கள் பதிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இது குறித்து சென்னைப் பெருநகா் குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சாா்பில் வெளியிடப்ட்ட செய்தி: சென்னை குடிநீா் வாரியம் சாா்பில் ரூ.238.52 கோடியில் மணலி மண்டலத்துக்குட்பட்ட இடையன்சாவடி, சடையன்குப்பம், காடப்பாக்கம் ஆகிய பகுதிகளில் கழிவுநீா்க் குழாய் பதிக்கும் பணிகளுக்கு நகராட்சி நிருவாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு அண்மையில் நடிக்கல் நாட்டினாா்.
அதனடிப்படையில் இடையன்சாவடி, சடையன்குப்பம், காடப்பாக்கம் ஆகிய பகுதிகளில் 2.77 கி.மீ நீளத்திற்கு கழிவுநீா் குழாய்கள் மற்றும் 22.65 கி.மீ. நீளத்திற்கு கழிவுநீா் விசைக் குழாய்கள் பதிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் மூலம், இடையன்சாவடி, சடையன்குப்பம், காடப்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள 4,000 வீட்டுகளுக்கு கழிவுநீா் இணைப்புகள் வழங்கப்பட்டு, 46,730 போ் பயனடைவாா்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement