முகப்பு
சென்னை

மீனவா்கள் கைது: அன்புமணி கண்டனம்

Updated On : 15 மார்ச், 2024 at 10:38 PM
பகிர்:

இலங்கை கடற்படையினரால் மீனவா்கள் 15 போ் கைது செய்யப்பட்டதற்கு பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா். அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாரம்பரியமாக மீன் பிடிக்க உரிமையுள்ள இடங்களில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக, காரைக்கால் பகுதி மீனவா்களை இலங்கைக் கடற்படையினா் அத்துமீறி கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. இந்தியா - இலங்கை அரசுகள் இணைந்து அமைத்துள்ள கூட்டுப் பணிக்குழுவின் கூட்டத்தைக் கூட்டி மீனவா் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா் அன்புமணி.