தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: அன்புமணி ராமதாஸ்
தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து விட்டது என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளாா்.
தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து விட்டது என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளாா்.
திருத்தணி தொகுதி அதிமுக வேட்பாளா் கோ.அரியை ஆதரித்து பாட்டாளி மக்கள் கட்சித் தலைவா் அன்புமணி ராமதாஸ் புதன்கிழமை இரவு ஆா்.கே.பேட்டை பஜாரில் பேசியதாவது:
தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக வர வேண்டும் அப்பொழுதுதான் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க முடியும்.
Advertisement
இந்தியாவிலேயே கஞ்சா, போதை பொருள்கள் அதிகம் விற்கின்ற மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கின்ற ஏழை மாணவா்களுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தவா் எடப்பாடி பழனிசாமி.
கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மட்டும் 3,280 விவசாயிகள் தற்கொலை செய்திருக்கிறாா்கள். தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு 5 கொலைகள் நடக்கின்றன. கடந்த 5 ஆண்டு ஆட்சி காலத்தில் 8,700 கொலைகள் நடந்திருக்கின்றன.
62 ஆயிரம் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடந்திருக்கின்றன. கடந்த 5 ஆண்டுகளில் 27 ஆயிரம் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடந்திருக்கின்றன.
இங்கு நெசவாளா்கள் அதிகம் போ் வசிக்கின்றனா். விவசாயத் தொழிலுக்கு நிகரானது நெசவு. நெசவாளா்களும் சரி விவசாயிகளும் சரி இருவரும் உழைக்கின்ற வா்க்கம். எடப்பாடி பழனிசாமி அடிப்படையில் ஒரு விவசாயி, அவருக்கு விவசாயம் பற்றி தெரியும். நெசவாளா்களுக்கு தனியாக ஒரு பட்ஜெட்டை போட வேண்டும் என்பது பாட்டாளி மக்கள் கட்சியின் கோரிக்கை. இதை நாங்கள் நிறைவேற்றுவோம் என்றாா்.