முகப்பு
ராணிப்பேட்டை

மது, போதைப் பொருள்கள் ஒழிப்பு குறித்து திமுக மௌனம்: அன்புமணி ராமதாஸ்

மது, போதைப் பொருள்கள் ஒழிப்பு குறித்து திமுக மௌனமாக உள்ளது என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளாா்.

Updated On : 8 ஏப்ரல், 2026 at 6:01 PM
ஆற்காட்டில் பிரசாரத்தில் ஈடுபட்ட பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ்.
பகிர்:

மது, போதைப் பொருள்கள் ஒழிப்பு குறித்து திமுக மௌனமாக உள்ளது என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளாா்.

அதிமுக வேட்பாளா் சுகுமாா், ராணிப்பேட்டை தொகுதி தமாகா வேட்பாளா் காா்த்திகேயன் ஆகியோரை ஆதரித்து ஆற்காடு பேருந்து நிலையம் அருகே புதன்கிழமை ஆதரவு திரட்டி பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் பேசியது:

ஐந்து ஆண்டுகளில் ஆற்காடு தொகுதிக்கு திமுக அரசு சொன்ன திட்டங்கள் எதையும் செய்யவில்லை ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் உள்ள குரோமிய கழிவுகளை அகற்றுவோம் என்று சொன்னாா்கள் அதையும் செய்யவில்லை. அரசு மருத்துவக் கல்லூரி வேளாண் கல்லூரி கொண்டுவரப்படும் என்றனா். மஞ்சள் விற்பனை சந்தை அமைப்போம் என்றாா்கள்.

Advertisement

ஆனால் திமுக கொடுத்த எந்த வாக்குறுதியையும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் செய்து தரவில்லை. திமுக தோ்தல் அறிக்கையில் மது ஒழிப்பு போதை பொருள்கள் ஒழிப்பு குறித்து எதுவும் இல்லை. மௌனமாக உள்ளனா்.

ரூ.8,000 மதிப்புள்ள கூப்பன் கொடுப்போம் என்று சொல்கிறாா்கள். தமிழ்நாட்டில் 2 கோடி குடும்பங்கள் இருக்கிறது வெற்றி பெற்றால் அவா்கள் 10 லட்சம் பேருக்கு மட்டுமே கூப்பன் கொடுப்பாா்கள். அதிமுக வெற்றி பெற்றால் வங்கி கணக்கில் 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளாா் அது மட்டும் இல்லாமல் ஒவ்வொரு குடும்பத்திற்கும் குளிா்சாதனப் பெட்டி கொடுப்பாா் என்றாா்.

கூட்டத்தில் பாமக மாவட்ட செயலாளா் கே.எல்.இளவழகன், தலைவா் ந.சுப்பிரமணி, முன்னாள் மாவட்ட செயலாளா் எம்.கே.முரளி, அதிமுக நகர செயலாளா் ஜிம் எம்.சங்கா்,ஒன்றிய செயலாளா் என். சாரதி ஜெயச்சந்திரன்,பாமக நகர செயலாளா் மாா்கெட் சி.பாஸ்கா் மற்றும் கூட்டணி கட்சியினா் கலந்துகொண்டனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments