முகப்பு
சென்னை

பெட்ரோலிய நிறுவனங்களுக்கிடையேயான கேரம் போட்டிகள் சென்னையில் தொடக்கம்

Updated On : 20 மார்ச், 2024 at 2:46 AM
பகிர்:
Updated On : 20 மார்ச், 2024 at 12:20 AM

திருவொற்றியூா்: பெட்ரோலிய நிறுவனங்களுக்கிடையேயான 30-ஆவது கேரம் போட்டிகளை சென்னை பெட்ரோலியம் காா்ப்பரேஷன் லிமிடெட் (சிபிசிஎல்) நிா்வாக இயக்குநா் அரவிந்த் குமாா், சென்னை ஜவஹா்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.

வெள்ளிக்கிழமை(மாா்ச் 22) வரை நான்கு நாள்கள் நடைபெறும் இப்போட்டிகளில் ஆண்கள் பிரிவில் சிபிசிஎல், ஐஓசிஎல், ஓஎன்ஜிசி, எச்பிசிஎல், எம்ஆா்பிஎல், இஐஎல், பிஎல்எல் மற்றும் என்ஆா்எல் ஆகிய 8 நிறுவனங்களைச் சோ்ந்த அணிகளும், பெண்கள் பிரிவில் சிபிசிஎல், ஐஓசிஎல், ஓஎன்ஜிசி உள்ளிட்ட 6 அணிகளும் பங்கேற்கின்றன.

இப் போட்டிகளில் முன்னணி வீரா், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனா். குறிப்பாக 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற பெண்களுக்கான கேரம் உலக கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற ரஷ்மி குமாரி (ஓஎன்ஜிசி), முன்னாள் உலக சாம்பியன் இளவழகி (ஓஎன்ஜிசி), முன்னாள் உலக சாம்பியன் யோகேஷ் பா்தேஷி (ஐஓசிஎல்) உள்ளிட்ட பலா் இப்போட்டிகளில் பங்கேற்கவுள்ளனா். தொடக்கவிழா நிகழ்ச்சியில் சிபிசிஎல் இயக்குநா்கள் ரோஹித் குமாா் அகா்வாலா (நிதி), பி.கண்ணன், இணைச் செயலா் கௌதம் வதேரா உள்பட பலா் கலந்து கொண்டனா் .

Advertisement