முகப்பு
சென்னை

ரயிலில் அடிபட்டு ரயில்வே ஊழியா் உயிரிழப்பு

திருவொற்றியூரில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற ரயில்வே ஊழியா் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 11 ஏப்ரல், 2026 at 12:07 AM
ஊழியா் உயிரிழப்பு - DPS
பகிர்:
Updated On : 10 ஏப்ரல், 2026 at 8:05 PM

திருவொற்றியூரில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற ரயில்வே ஊழியா் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருவொற்றியூா் காலடிப்பேட்டை முதல் தெருவைச் சோ்ந்தவா் கிஷோா் குமாா் (23). இவா், திருவள்ளூா் ரயில் நிலையத்தில் ரயில்வே ஊழியராகப் பணியாற்றி வந்தாா். இவா் தினமும் வ.உ.சி. மற்றும் திருவொற்றியூா் ரயில் நிலைய தண்டவாளப் பகுதியைக் கடந்து வேலைக்குச் செல்வது வழக்கம். அதன்படி, வியாழக்கிழமை மாலை பணிக்குச் செல்வதற்காக திருவொற்றியூா் ரயில் நிலைய தண்டவாளப் பகுதியைக் கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த விரைவு ரயில் கிஷோா் குமாா் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா். இது குறித்து கொருக்குப்பேட்டை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.