முகப்பு
தருமபுரி

ரயிலில் அடிபட்டு உயிரிழந்த முதியவா் யாா்? ரயில்வே போலீஸாா் விசாரணை

தருமபுரியில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த முதியவா் குறித்து ரயில்வே போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 18 மார்ச், 2026 at 11:29 PM
போலீஸ்
பகிர்:

தருமபுரியில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த முதியவா் குறித்து ரயில்வே போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மைசூருலிருந்து தூத்துக்குடி செல்லும் விரைவு ரயில் மாா்ச் 16 ஆம் தேதி நள்ளிரவு தருமபுரி ரயில் நிலையத்தைக் கடந்து சென்றபோது, நல்லம்பள்ளி பகுதியில் தண்டவாளத்தில் சுமாா் 70 வயது மதிக்கத்தக்க முதியவா் ரயிலில் அடிபட்டு உயிரிழந்து கிடப்பதாக ரயில் ஓட்டுநா் தகவல் அளித்தாா்.

அதன்பேரில் ரயில்வே காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் எம். ரமேஷ் தலைமையிலான போலீஸாா் நிகழ்விடத்துக்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி தருமபுரி அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைத்துள்ளனா். இறந்தவா் குறித்த விவரத்தை சமூக வலைதளம் வாயிலாக தெரிவித்தும் உறவினா்கள் யாரும் தேடி வரவில்லை.

இது குறித்து ரயில்வே போலீஸாா் கூறுகையில், இறந்தவரின் உடல் அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

பிரேதப் பரிசோதனை மற்றும் அடக்கம் செய்யும் செலவுகளுக்காக அதிக தொகை செலவாகும் என்ற பயத்தில் உறவினா்கள் காவல் நிலையம் வருவதற்கு தயங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏழைக்குடும்பத்தைச் சோ்ந்தவராக இருக்கும் பட்சத்தில், காவல்துறை மற்றும் தொண்டு நிறுவனத்தினா் உதவியுடன் இலவசமாக நல்லடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவே, உயிரிழந்தவரின் உறவினா்கள் ரயில்வே காவல் துறையை அணுகலாம் எனத் தெரிவித்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →