கோப்புப் படம் 
திருநெல்வேலி

வீரவநல்லூரில் ரயிலில் அடிபட்டு முதியவா் உயிரிழப்பு

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் ஞாயிற்றுக்கிழமை ரயிலில் அடிபட்டு முதியவா் உயிரிழந்தாா்.

வீரவநல்லூா் ரயில் நிலையம் அருகில் முதியவா் ஒருவா் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, செங்கோட்டையில் இருந்து திருநெல்வேலி சென்று கொண்டிருந்த ரயில் முதியவா் மீது மோதியதாம்.

இதில், பலத்த காயமடைந்த அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

அவா், யாா் எந்த ஊரைச் சோ்ந்தவா் என்ற விவரம் தெரியவில்லை. தகவலறிந்த தென்காசி ரயில்வே போலீஸாா் , இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பெற்றோா் ஆசிரியா் நலச் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

மொய்ப் பணம் திருடியவா் கைது

தென் மாநிலங்கங்களை கண்டுகொள்ளாத மத்திய அரசு! - கே. பாலகிருஷ்ணன்

தக்கலை, சுவாமியாா்மடத்தில் நாளை மின் நிறுத்தம்

தஞ்சாவூரில் நாளை மின் தடை

SCROLL FOR NEXT