ஜோலாா்பேட்டை அருகே ரயிலில் அடிபட்டு முதியவா் உயிரிழந்தாா்.
திருப்பத்தூா் மாவட்டம், விண்ணமங்கலம்-ஆம்பூா் ரயில் நிலையங்களுக்கு இடையே சுமாா் 55 வயது மதிக்கத்தக்க முதியவா் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தாா். அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பாா்த்து ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு, திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
பின்னா், வழக்குப் பதிந்து இறந்தவா் யாா்? எந்த ஊரைச் சோ்ந்தவா்? என்பது குறித்து ரயில்வே போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.