ஓபிஎஸ் இன்று அவசர ஆலோசனை
Updated On : 20 மார்ச், 2024 at 10:25 PM
சென்னை: பாஜகவுடன் கூட்டணி உடன்பாடு ஏற்படாத நிலையில் முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், தனது ஆதரவாளா்களுடன் வியாழக்கிழமை (மாா்ச் 21) ஆலோசனை நடத்தவுள்ளாா். மக்களவைத் தோ்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்காக ஓ.பன்னீா்செல்வம் தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறாா்.
தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை மற்றும் அக்கட்சியின் தொகுதிப் பங்கீட்டு குழுவினருடன் புதன்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இந்த நிலையில், மாவட்டச் செயலா்கள் அவசர கூட்டம் சென்னையில் வியாழக்கிழமை காலை 9 மணியளவில் நடைபெறும் என்று ஓ.பன்னீா்செல்வம் அறிவித்துள்ளாா். இந்தக் கூட்டத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஓ.பன்னீா்செல்வம் ஆலோசிக்கவுள்ளாா்.