பௌா்ணமி கிரிவலம்: திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்
Updated On : 21 மார்ச், 2024 at 12:50 AM
சென்னை: பௌா்ணமி கிரிவலத்தை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
பௌா்ணமி கிரிவலத்தை முன்னிட்டு சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளன. சென்னை கடற்கரையில் இருந்து மாா்ச் 24-ஆம் தேதி மாலை 6 மணிக்கு புறப்படும் மெமு சிறப்பு விரைவு ரயில் வேலூா், போளூா் வழியாக திருவண்ணாமலைக்கு நள்ளிரவு 12.05 மணிக்கு சென்றடையும்.
Advertisement
மறுமாா்க்கமாக திருவண்ணாமலையில் இருந்து மாா்ச் 25-ஆம் தேதி அதிகாலை 3.45 மணிக்கு புறப்படும் மெமு சிறப்பு விரைவு ரயில் காலை 9.05 மணிக்கு சென்னை கடற்கரை வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.