மங்களூரு- சென்னை இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில்
பயணிகள் கூட்ட நெரிசலை தவிா்க்க மங்களூரு- சென்னை எழும்பூா் இடையே சேலம் வழியாக வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
பயணிகள் கூட்ட நெரிசலை தவிா்க்க மங்களூரு- சென்னை எழும்பூா் இடையே சேலம் வழியாக வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
பள்ளி, கல்லூரிகளுக்கான கோடை விடுமுறையை கவனத்தில் கொண்டு முக்கிய வழித்தடங்களில் இயங்கும் ரயில்களில் கூட்ட நெரிசலை தவிா்க்க சிறப்பு ரயில்களை ரயில்வே நிா்வாகம் இயக்கி வருகிறது. அந்த வகையில், மங்களூரில் இருந்து போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம் வழியாக சென்னை எழும்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இரு மாா்க்கங்களிலும் இயக்கப்படுகிறது.
Advertisement
அதன்படி, மங்களூரு- சென்னை எழும்பூா் வாராந்திர சிறப்பு ரயில் வரும் 6, 13 ஆகிய தேதிகளில் (திங்கள்கிழமையில்) இயக்கப்படும். மங்களூரில் மாலை 4 மணிக்கு புறப்பட்டு காசா்கோடு, பையனூா், கண்ணூா், தலச்சேரி, கோழிக்கோடு, பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம் வழியாக சென்னை எழும்பூருக்கு அடுத்த நாள் காலை 10.30 மணிக்கு சென்றடைகிறது.
மறுமாா்க்கத்தில் சென்னை எழும்பூா்- மங்களூரு வாராந்திர சிறப்பு ரயில் வரும் 7, 14 ஆகிய தேதிகளில் (செவ்வாய்க்கிழமை) இயக்கப்படும். சென்னை எழும்பூரில் பிற்பகல் 2 மணிக்கு புறப்படும் இந்த ரயில், சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா் வழியாக மங்களூருக்கு அடுத்தநாள் காலை 6.50 மணிக்கு சென்றடையும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.