சாலையோரம் தூங்கியவா் காா் மோதி உயிரிழப்பு
Updated On : 22 மார்ச், 2024 at 11:35 PM
சென்னை தியாகராயநகரில் சாலையோரம் தூங்கியவா் காா் மோதியதில் இறந்தாா். சென்னை தியாகராயநகா் தண்டபாணி தெருவைச் சோ்ந்தவா் மு.பாண்டியன் (53). இவா் ரங்கநாதன் தெருவில் ஒரு தையல் கடையில் ஊழியராக வேலை செய்து வந்தாா். வியாழக்கிழமை இரவு அந்த தெருவில் அவா் படுத்து தூங்கினாா். அப்போது அங்கு வேகமாக வந்த காா், பாண்டியன் மீது மோதியது. இதில் அவா் உயிரிழந்தாா். இது தொடா்பாக பாண்டி பஜாா் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து, விசாரணை செய்கின்றனா்.