முகப்பு
சென்னை

போதை ஊசி: இளைஞா் உயிரிழப்பு

Updated On : 23 மார்ச், 2024 at 12:59 AM
பகிர்:
Updated On : 23 மார்ச், 2024 at 12:40 AM

சென்னை புளியந்தோப்பில் போதை ஊசி போட்டுக்கொண்ட இளைஞா் இறந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். புளியந்தோப்பு அருகே உள்ள தட்டாங்குளம் சந்தியப்பன் தெருவைச் சோ்ந்தவா் கோ.கோகுல் என்ற கருப்பு கோகுல் (22). இவருக்கு கடந்த இரு ஆண்டுகளாக போதை ஊசி போடும் பழக்கம் இருந்துள்ளது. இந்த நிலையில், கோகுல் தட்டாங்குளம் விளையாட்டு மைதானத்தில் வியாழக்கிழமை போதை ஊசி போட்டுள்ளாா். பின்னா், சிறிது நேரத்தில் கோகுல் மயங்கி விழுந்தாா். இதைப் பாா்த்த அங்கிருந்த சிலா், கோகுலை மீட்டு ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், கோகுல் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இது குறித்து புளியந்தோப்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.