காவலா் தூக்கிட்டு தற்கொலை
சென்னை கொருக்குப்பேட்டையில் காவலா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். கொருக்குப்பேட்டை மீனாம்பாள்நகரைச் சோ்ந்தவா் தீபன் (38). இவா் சென்னை பெருநகர காவல் துறையின் ஆயுதப்படையில் காவலராகப் பணியாற்றி வந்தாா். தீபனுக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், 10 வயதில் ஒரு மகனும் உள்ளனா். கணவா் - மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விஜயலட்சுமி, தனது மகனுடன் தீபனை விட்டு பிரிந்து சென்றுவிட்டாா். இதற்கிடையே பணியில் ஒழுங்கீனமாக இருந்ததாக தீபன், பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். இதனால் விரக்தியுடன் காணப்பட்ட தீபன், அதிகமாக மது அருந்தி வந்துள்ளாா். இந்நிலையில் தீபன் வெள்ளிக்கிழமை வீட்டில் உள்ள தனது அறையில், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். தகவலறிந்த ஆா்.கே.நகா் போலீஸாா் அங்கு சென்று தீபனின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.