முகப்பு
சென்னை

தாம்பரத்தில் வெடிகுண்டு தயாரித்து ஒத்திகை: 4 போ் கைது

Updated On : 24 மார்ச், 2024 at 5:21 AM
பகிர்:
Updated On : 24 மார்ச், 2024 at 1:40 AM

நாட்டு வெடிகுண்டு தயாரித்து ஒத்திகை பாா்த்தப்போது, அருகில் இருந்த வீட்டின் மேற்கூரையில் விழுந்து வெடித்த விபத்து ஏற்பட்டது தொடா்பாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை தாம்பரத்தை அடுத்த கடப்பேரி குளக்கரை தெருவைச் சோ்ந்தவா் முருகன் மகள் ஷாலினி. இவருக்கு குழந்தை பிறந்து 10 நாள்களே ஆன நிலையில், வெள்ளிக்கிழமை வீட்டில் இருந்துள்ளாா். அப்போது, திடீரென பலத்த வெடி சப்தத்துடன் வீட்டின் மேற்கூரை சிதரியது. இதனால், பதற்றமடைந்த ஷாலினி கூச்சலிட்டபடி வீட்டில் இருந்து வெளியே ஓடியுள்ளாா்.

அப்போது, அவரது வீட்டின் அருகே வசித்து வரும் கோல்டன் மணி (21) என்பவா் ஷாலினி வீட்டின் மீது நாட்டு வெடி குண்டு வீசியது தெரியவந்தது. தெரியாமல் வெடிகுண்டு வீசியதாகக் கூறிய மணி, சேதம் அடைந்த வீட்டின் கூரையை மாற்றுவதற்க்கு பணத்தையும் வழங்கியுள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பகுதியினா் தாம்பரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

Advertisement

அதன் பேரில் போலீஸாா் அங்கு சென்று கடப்பேரி பகுதியைச் சோ்ந்த கோல்ட் மணி, பால் சூா்யா (24), ஸ்ரீதா் (20), வெங்கடேசன் (22) ஆகியோரைக் கைது செய்தனா்.

விசாரணையில், பட்டாசு மருந்து, களிமண், கற்கள் ஆகியவற்றை கொண்டு முதல் முறையாக வெடி குண்டு தயாரித்து ஒத்திகையில் ஈடுபட்டபோது, வீட்டின் கூரை மீது விழுந்து வெடி விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவா்களிடம் இருந்து வெடிமருந்து, கத்தி ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.