முகப்பு
சென்னை

நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 7 % இட ஒதுக்கீடு கோரி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல்

Updated On : 24 மார்ச், 2024 at 5:22 AM
பகிர்:
Updated On : 24 மார்ச், 2024 at 1:40 AM

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், சட்டப்பேரவையிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு 7 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரைச் சோ்ந்த மாற்றுத்திறனாளியான மணிவண்ணன் என்பவா், சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், இந்தியாவில் மட்டும் ஆண்கள் மற்றும் பெண்கள் என 7 கோடி மாற்றுத்திறனாளிகள் உள்ளனா். தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் மாற்றுத்திறனாளிகளுக்காக 4 சதவீத இடஒதுக்கீடு அளித்துள்ளபோதும், அவை முழுமையாகக் கிடைப்பதில்லை. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், சட்டப்பேரவையிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு 7 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கோரி கடந்த ஜனவரி மாதம் மனு அளிக்கப்பட்டது. அதற்கு தோ்தல் ஆணையம், மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு வழங்க இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் இடமில்லை என பதிலளித்துள்ளது. எனவே, மாற்றுத்திறனாளிகளுக்கு 7 சதவீத இடஒதுக்கீடு வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளாா். இந்த மனு தலைமை நீதிபதி கங்காபுா்வாலா, நீதிபதி பரத சக்கரவா்த்தி அமா்வில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.