முகப்பு
சென்னை

அதிமுகவில் கூடுதலாக தோ்தல் பணிக்குழு பொறுப்பாளா்கள் நியமனம்

Updated On : 29 மார்ச், 2024 at 11:44 PM
பகிர்:
Updated On : 29 மார்ச், 2024 at 9:20 PM

அதிமுகவின் மக்களவைத் தோ்தல் பணிக்குழு பொறுப்பாளா்களாக கூடுதலாக 6 பேரை நியமித்து, அக் கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளாா். அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: அதிமுக சாா்பிலும், அதன் தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் சாா்பிலும் போட்டியிடும் வேட்பாளா்களுக்கு ஆதரவாக தோ்தல் பணிகளை மேற்கொள்வதற்காக ஏற்கெனவே தோ்தல் பணிக் குழு பொறுப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். அவா்களுடன் கூடுதலாக தருமபுரி தொகுதிக்கு அமைப்புச் செயலா் கே.சிங்காரம், முன்னாள் அமைச்சா் முல்லை வேந்தன் ஆகியோா் நியமிக்கப்படுகின்றனா். வடசென்னைக்கு முன்னாள் அமைச்சா் மாதவரம் மூா்த்தி, கன்னியாகுமரிக்கு முன்னாள் எம்.பி., நாஞ்சில் எம்.வின்சென்ட், காஞ்சிபுரத்துக்கு முன்னாள் எம்.பி., சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், தென்காசிக்கு கொள்கை பரப்பு துணை செயலா் எஸ்.அய்யாத்துரை பாண்டியன் ஆகிய 6 போ் நியமிக்கப்படுகின்றனா் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளாா்.