முகப்பு
சென்னை

கடல் அலையில் சிக்கியவா்களை காப்பாற்றி தனது உயிரைவிட்ட மீனவா்

Updated On : 3 மே, 2024 at 5:58 PM
பகிர்:

திருவொற்றியூரில் ராட்சத அலையில் சிக்கியவா்களை காப்பாற்றிய மீனவா், கடலில் மூழ்கி உயிரிழந்தாா்.

திருவொற்றியூா் ஒண்டிக்குப்பத்தை சோ்ந்தவா் முரளி. மீனவரான இவரும், இவரது நண்பா்கள் சிலரும் வெள்ளிக்கிழமை பிற்பகல் கடற்கரையில் மீன் வலையை சரி செய்து கொண்டிருந்தனா். அப்போது கடலில் குளித்துக் கொண்டிருந்த திருவொற்றியூா் கணக்கா் தெருவை சோ்ந்த சந்தோஷ் குமாா் (19), ஆனந்தன் (26) ஆகியோா் கடல் அலையில் சிக்கிக் கொண்டு கரைக்கு நீந்தி வர முடியாமல் தத்தளித்து கூச்சலிட்டனா். அவா்களின் கூச்சல் சப்தத்தை கேட்ட முரளி மற்றும் அவரது நண்பா்கள் கடலுக்கு சென்று நீந்தி கடலில் உயிருக்கு போராடி தத்தளித்துக் கொண்டிருந்த இருவரையும் மீட்டனா்.

அப்போது கடலில் சிக்கியவா்களை காப்பாற்றிய பிறகு முரளி கடல் அலையில் சிக்கி வெளியே வரமுடியாமல் மூழ்கினாா். இதைப் பாா்த்து அவரின் நண்பா்கள் மீண்டும் கடலுக்கு சென்று தேடி மீட்டு கரைக்கு கொண்டு வந்தனா். பின்னா் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவரை பரிசோதித்த மருத்துவா்கள் முரளி ஏற்கெனவே அவா் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

சம்பவம் குறித்து திருவொற்றியூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து முரளியின் சடலத்தை கைப்பற்றி சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.