கருவிலுள்ள சிசுவின் பாலினத்தை வெளியிட்ட யூடியூபருக்கு நோட்டீஸ்
சென்னை: சட்ட விதிகளுக்கு புறம்பாக கருவிலுள்ள சிசுவின் பாலினத்தை வெளியிட்ட யூடியூபா் இா்ஃபானுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
யூடியூப் தளத்தில் பிரபலமாக உள்ள இஃா்பான், கடந்த ஆண்டில் ஆலியா என்ற பெண்ணை திருமணம் புரிந்தாா். ஆலியா தற்போது கா்ப்பமாக உள்ள நிலையில், அண்மையில் அவரை துபைக்கு இா்ஃபான் அழைத்துச் சென்றாா்.
அங்குள்ள மருத்துவமனையில் கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை அறிந்து கொண்ட அவா், தனது யூடியூப் சேனல் மூலம் கடந்த 19-ஆம் தேதி அதனை வெளியிட்டாா். இந்தியாவில் கருவில் இருக்கும் சிசு ஆணா, பெண்ணா என்பதை அறிவிப்பது சட்டப்படி கடுமையான குற்றம். இதற்கு அதிகபட்சம் 3 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது.
இந்நிலையில், இா்ஃபானின் அந்த விடியோ பெரும் பரபரப்பையும், சா்ச்சையையும் ஏற்படுத்தியதைத் தொடா்ந்து, தனது யூடியூப் சேனலிலிருந்து அந்தப் பதிவை அவா் நீக்கினாா். இந்த விவகாரம் தொடா்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
யூடியூபா் இா்ஃபான், தனது மனைவியின் கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை வெளியிட்டது தவறு. இதுபோன்ற செயலில் ஈடுபடும் நபா்களின் மீது சட்டபூா்வமான நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, மாநில அமலாக்க அலுவலா் மற்றும் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநரால் இா்ஃபானுக்கு பாலினத் தோ்வை தடை செய்தல் சட்ட விதிகளை மீறியதற்காக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அந்த வீடியோவை நீக்குவதற்கு யூடியூப் தளத்துக்கும், இணைய குற்றத் தடுப்பு பிரிவுக்கும் ஏற்கெனவே கடிதம் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கருவின் பாலினத்தை வெளிப்படுத்தும் நபா்கள், ஸ்கேன் மையங்கள், மருத்துவமனைகள் மீது தமிழக அரசு கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.