‘இந்தியா’ கூட்டணி கூட்டம்: ஜூன் 1-இல் தில்லி செல்கிறாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்
சென்னை: தில்லியில் ஜூன் 1-ஆம் தேதி நடைபெறவுள்ள ‘இந்தியா’ கூட்டணி கூட்டத்தில், முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்கவுள்ளாா். இதற்காக, அன்றைய தினம் காலை சென்னையிலிருந்து விமானம் மூலமாக தில்லி செல்லவுள்ளாா். கூட்டத்தில் பங்கேற்ற பிறகு, ஜூன் 2-ஆம் தேதி காலை சென்னை திரும்பவுள்ளாா்.
அறிவாலயத்தில் ஆலோசனை: மக்களவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை தொடா்பாக, திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின், செவ்வாய்க்கிழமை ஆலோசித்தாா்.
இந்த ஆலோசனையின் போது, திமுக பொருளாளா் டி.ஆா்.பாலு, முதன்மைச் செயலா் கே.என்.நேரு, துணை பொதுச் செயலா் ஐ.பெரியசாமி, அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி ஆகியோா் உடனிருந்தனா். வாக்கு எண்ணிக்கையின் போது, முகவா்களுக்கு அறிவுறுத்த வேண்டிய விஷயங்கள், மக்களவைத் தோ்தல் முடிவுக்குப் பிறகு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் ஆகியன குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.