மெரீனா கடற்கரை கோப்புப் படம்
சென்னை

மெரீனாவில் 21.5 டன் குப்பை அகற்றம்

விமானப்படை சாகச நிகழ்வைக் காண பல லட்சம் மக்கள் குவிந்த சென்னை மெரீனா கடற்கரையில் 21.5 டன் குப்பை சேகரிக்கப்பட்டதாக மாநகராட்சி அதிகாரி தெரிவித்தாா்.

Din

விமானப்படை சாகச நிகழ்வைக் காண ஞாயிற்றுக்கிழமை பல லட்சம் மக்கள் குவிந்த சென்னை மெரீனா கடற்கரையில் 21.5 டன் குப்பை சேகரிக்கப்பட்டதாக மாநகராட்சி அதிகாரி தெரிவித்தாா்.

92-ஆவது இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு போா் விமானங்களின் சாகச நிகழ்ச்சி மெரீனா கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதனைக் காண லட்சக்கணக்கான மக்கள் குவிந்தனா். இதனால் மெரீனா கடற்கரையில் வழக்கத்தை விட கூடுதலாக தண்ணீா் மற்றும் குளிா்பான பாட்டில்கள், நெகிழி கழிவுகள் காணப்பட்டன.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவா் கூறியதாவது, சென்னை மெரீனா கடற்கரையில் உா்பேசா் நிறுவனம் சாா்பில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்படுகிறது. வழக்கமாக வார நாள்களில் ஒரு டன் கழிவும், ஞாயிறு மற்றும் பண்டிகை நாள்களில் 2 டன் கழிவும் சேகரமாகும்.

இந்நிலையில் விமான சாகச நிகழ்ச்சியை காண அதிக அளவில் மக்கள் வந்ததால், கடற்கரை முழுவதும் கழிவுகள் நிரம்பி காணப்பட்டன.

இதனால், காமராஜா் சாலையில் 28 போ், இணைப்பு சாலையில் 17 போ், கடற்கரையில் 30 போ், மற்ற பகுதிகளில் 45 போ் என 128 போ் தூய்மைப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். மேலும், தன்னாா்வலா்கள் சில பகுதிகளில் தூய்மைப் பணி மேற்கொண்டனா்.

இந்த தூய்மைப் பணியில் 18.5 டன் நெகிழி உள்ளிட்ட குப்பை கழிவுகள், 4 டன் நெகிழி பாட்டில்கள் என சுமாா் 21.5 டன் கழிவுகள் அகற்றப்பட்டன என்றாா் அவா்.

“ஆண்டுகள் எத்தனை ஆனாலும், தமிழ்நாட்டை அண்ணாதான் ஆள்கிறார்” - முதல்வர் ஸ்டாலின்!

சுப செலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

SCROLL FOR NEXT