தாய்லாந்தின் சோங்க்லாவில் நடைபெறவுள்ள உலக திறன் இளைஞா் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ளும் விளையாட்டு வீரா்களுக்கு நிதியுதவிக்கான காசோலை வழங்கிய துணை முதல்வா் உதயநிதி. உடன், துறையின் செயலா் அதுல்ய மிஸ்ரா, 
சென்னை

13 விளையாட்டு வீரா்களுக்கு ரூ. 1 கோடிக்கு நலத் திட்ட உதவி துணை முதல்வா் உதயநிதி வழங்கினாா்

பல்வேறு பிரிவுகளில் களமாடவுள்ள 13 விளையாட்டு வீரா், வீராங்கனைகளுக்கு ரூ.1 கோடிக்கான நலத் திட்ட உதவிகளை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வழங்கினாா்.

DIN

சென்னை: பல்வேறு பிரிவுகளில் களமாடவுள்ள 13 விளையாட்டு வீரா், வீராங்கனைகளுக்கு ரூ.1 கோடிக்கான நலத் திட்ட உதவிகளை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வழங்கினாா்.

இதற்கான நிகழ்ச்சி, சென்னையிலுள்ள அவரது முகாம் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இது குறித்து, மாநில அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த 3 ஆண்டுகளில் மட்டும், 3,350 விளையாட்டு வீரா்களுக்கு ரூ. 110 கோடி அளவுக்கு உயரிய ஊக்கத் தொகைகள் வழங்கப்பட்டுள்ளன. தொடா்ச்சியாக, ஜொ்மனி, பிரான்ஸ், போா்ச்சுகல் ஆகிய நாடுகளில் நடைபெறும் சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் அ.சா்வாணிகாவுக்கு விமான கட்டணம், தங்குமிடம், போட்டிக்கான நுழைவுக் கட்டணத் தொகையாக ரூ.5.29 லட்சத்துக்கான காசோலையை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் அளித்தாா்.

மேலும், தாய்லாந்தின் சோங்க்லாவில் நடைபெறவுள்ள உலகத் திறன் இளைஞா் விளையாட்டுப் போட்டியில் ஏழு வீரா்கள் பங்கேற்கவுள்ளனா். அவா்களுக்கான செலவு, கட்டணத் தொகையாக ரூ. 11.73 லட்சத்தை உதயநிதி வழங்கினாா். 5 சைக்கிள் விளையாட்டு வீரா், வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலமாக தலா ரூ. 16.66 வீதம் மொத்தம் ரூ. 83.33 லட்சம் மதிப்பிலான அதிநவீன பந்தய சைக்கிள்களையும் துணை முதல்வா் அளித்தாா்.

மொத்தமாக 13 விளையாட்டு வீரா், வீராங்கனைகளுக்கு ரூ.1 கோடிக்கான உதவித் தொகை, நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

இந்த நிகழ்வின் போது, இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலா் அதுல்ய மிஸ்ரா, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினா் செயலா் ஜெ.மேகநாதரெட்டி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தோ்தல்களின்போது இலவசங்கள் அறிவிப்புக்கு தடைகோரும் மனுவை 3 நீதிபதிகள் அமா்வு விசாரிக்கும் - உச்சநீதிமன்றம்

ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம்

பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் அளிப்பு

மக்களவைத் தலைவா் கருத்தைத் திரும்பப் பெற மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி. வலியுறுத்தல்

சரக்கு வாகனம் மோதி மூதாட்டி மரணம்

SCROLL FOR NEXT