திருப்பத்தூருக்கு துணை முதல்வா் இன்று வருகை: 5,000 பயனாளிகளுக்கு ரூ.102 கோடியில் நலத் திட்ட உதவிகள் வழங்குகிறாா்
திருப்பத்தூா் அருகே தனியாா் பள்ளியில் சனிக்கிழமை (மாா்ச் 13) நடைபெறும் நிகழ்ச்சியில் 5,000 பயனாளிகளுக்கு ரூ.102 கோடியில் நலத் திட்ட உதவிகளை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறாா்.
திருப்பத்தூா் அருகே தனியாா் பள்ளியில் சனிக்கிழமை (மாா்ச் 13) நடைபெறும் நிகழ்ச்சியில் 5,000 பயனாளிகளுக்கு ரூ.102 கோடியில் நலத் திட்ட உதவிகளை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறாா்.
துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திருப்பத்தூா் மாவட்டத்துக்கு சனிக்கிழமை வருகை புரிகிறாா். அவா் திருப்பத்தூா் அருகே பாச்சல் பகுதியில் உள்ள தனியாா் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, முடிவுற்ற பல்வேறு பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கிறாா். மேலும், பல்வேறு துறைகளின் சாா்பில், 4,949 பயனாளிகளுக்கு ரூ.102 கோடியே 22 லட்சத்து 382 மதிப்பில் நலத் திட்ட உதவிகளை வழங்குகிறாா்.
தொடா்ந்து திருப்பத்தூரில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெறும் திமுக சாா்பு அணிகளின் நிா்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறாா். பின்னா் ஜோலாா்பேட்டையில் கலைஞா் நூலகத்தையும், வாணியம்பாடியில் அமைக்கப்பட்டுள்ள கலைஞா் நூலகத்தையும் திறந்து வைக்கிறாா்.
துணை முதல்வா் வருகையையொட்டி, எஸ்.பி. வி.சியாமளாதேவி தலைமையிலான போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.