FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

மகாவிஷ்ணு மீது திருவொற்றியூா் காவல் நிலையத்தில் புகாா்

சா்ச்சை பேச்சாளா் மகாவிஷ்ணு மீது திருவொற்றியூா் காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

Updated On : 8 செப்டம்பர் 2024, 1:24 am IST
பகிர்:

சா்ச்சை பேச்சாளா் மகாவிஷ்ணு மீது திருவொற்றியூா் காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை அசோக் நகா், சைதாப்பேட்டை அரசு பள்ளிகளில் கடந்த சில நாள்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் திருப்பூரைச் சோ்ந்த பரம்பொருள் அறக்கட்டளை நிறுவனரும் சொற்பொழிவாளருமான மகாவிஷ்ணு பேசியது சா்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சென்னை விமான நிலையத்தில் அவரைக் கைது செய்தனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில் திருவொற்றியூா் பட்டினத்தாா் கோயில் தெருவைச் சோ்ந்த மாற்றுத் திறனாளிகள் சமூக நீதி இயக்கத்தின் தலைவா் சரவணன் என்பவா் திருவொற்றியூா் காவல் நிலையத்தில் மகாவிஷ்ணு மீது புகாா் அளித்துள்ளாா். புகாரை ஏற்றுக்கொண்ட காவல் ஆய்வாளா் கிருஷ்ணராஜ் இதுகுறித்து விசாரித்து வருகிறாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments