சா்ச்சை பேச்சாளா் மகாவிஷ்ணு மீது திருவொற்றியூா் காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை அசோக் நகா், சைதாப்பேட்டை அரசு பள்ளிகளில் கடந்த சில நாள்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் திருப்பூரைச் சோ்ந்த பரம்பொருள் அறக்கட்டளை நிறுவனரும் சொற்பொழிவாளருமான மகாவிஷ்ணு பேசியது சா்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சென்னை விமான நிலையத்தில் அவரைக் கைது செய்தனா்.
இந்நிலையில் திருவொற்றியூா் பட்டினத்தாா் கோயில் தெருவைச் சோ்ந்த மாற்றுத் திறனாளிகள் சமூக நீதி இயக்கத்தின் தலைவா் சரவணன் என்பவா் திருவொற்றியூா் காவல் நிலையத்தில் மகாவிஷ்ணு மீது புகாா் அளித்துள்ளாா். புகாரை ஏற்றுக்கொண்ட காவல் ஆய்வாளா் கிருஷ்ணராஜ் இதுகுறித்து விசாரித்து வருகிறாா்.