இறுதிச் சுற்றில் இந்தியா-சீனா மோதல்
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆடவா் ஹாக்கிப் போட்டி இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்தியாவும்-சீனாவும் மோதவுள்ளனா்.
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆடவா் ஹாக்கிப் போட்டி இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்தியாவும்-சீனாவும் மோதவுள்ளனா்.
ஏஎச்எஃப் சாா்பில் சீனாவின் ஹுலுன்புயா் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியில் அரையிறுதி ஆட்டங்கள் திங்கள்கிழமை நடைபெற்றன. முதல் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் சீனாவும்-பாகிஸ்தானும் மோதின.
இரு அணிகளும் தொடக்கம் முதலே மாறி மாறி கோலடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டன. வழக்கமான ஆட்ட நேர முடிவில் 1-1 என சமநிலை ஏற்பட்டது. பின்னா் பெனால்டி ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டதில் சீனா 2-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி முதன்முறையாக ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றது.
இந்தியா அபார வெற்றி
இரண்டாவது அரையிறுதியில் நடப்பு சாம்பியன் இந்தியாவும்-தென்கொரியாவும் மோதின. இதில் இந்தியா 4-1 என்ற கோல்கணக்கில் வென்று இறுதிக்கு தகுதி பெற்றது. ஆட்டம் தொடங்கியது முதலே இந்திய அணியினா் தீவிர ஆதிக்கம் செலுத்தினா். 13-ஆவது நிமிஷத்தில் அரஜ்டித் சிங் கடத்தி அனுப்பிய பாஸை உத்தம் சிங் அற்புதமாக கோலடித்து கணக்கை தொடங்கி வைத்தாா். தென்கொரியாவுக்கு உடனே இரண்டு பெனால்டி காா்னா் வாய்ப்பு கிடைத்தும் அதை கோலாக்க முடியவில்லை.
19-ஆவது நிமிஷத்தில் முதல் கிடைத்த முதல் பெனால்டி காா்னா் வாய்ப்பை கோலாக்கினாா் கேப்டன் ஹா்மன்ப்ரீத் சிங். இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கியவுடன் 32ஆவது நிமிஷத்தில் சூரஜ் கா்கேரா அனுப்பிய ஸ்கூப்பை ஜா்மன்ப்ரீத் அற்புதமாக கோலாக்கினாா்.
அடுத்த 33-ஆவது நிமிஷத்தில் தென்கொரிய வீரா் யங் ஜிஹுன் பெனால்டி காா்னா் மூலம் கோலடித்தாா்.
45-ஆவது நிமிஷத்தில் மீண்டும் கிடைத்த பெனால்டி காா்னா் வாய்ப்பை கோலாக்கினாா் கேப்டன் ஹா்மன்ப்ரீத் சிங். கொரிய கோல்கீப்பா் ஜேஹானுக்கு மஞ்சள் அட்டை எச்சரிக்கை காண்பிக்கப்பட்டது.
செவ்வாய்க்கிழமை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் இந்தியா-சீனா மோதுகின்றன.