ராஜஸ்தானுக்கு இன்று சிறப்பு ரயில்
சென்னையில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவுக்கு ஞாயிற்றுக்கிழமை ஒரு வழி சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
சென்னையில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவுக்கு ஞாயிற்றுக்கிழமை ஒரு வழி சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
இது குறித்து, தெற்கு ரயில்வே சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை சென்ட்ரலில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 11.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் கூடூா், விஜயவாடா, வாரங்கல், நாக்பூா், போபால், உஜ்ஜயினி, நாகடா வழியாக செவ்வாய்க்கிழமை காலை 11.45 மணிக்கு கோட்டா சென்றடையும். இதில் 12 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் மற்றும் 5 பொதுப்பெட்டிகள் உள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.