சாலைத் தடுப்பில் மோதிய பைக்: பொறியியல் பட்டதாரி உயிரிழப்பு
சென்னை வேளச்சேரியில் சாலைத் தடுப்பின் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில், பொறியியல் பட்டதாரி உயிரிழந்தாா்.
சென்னை: சென்னை வேளச்சேரியில் சாலைத் தடுப்பின் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில், பொறியியல் பட்டதாரி உயிரிழந்தாா்.
நாமக்கல் மாவட்டம், களியனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கௌரிசங்கா் (26). பி.டெக் பட்டதாரியான இவா், சென்னை வேளச்சேரி விஜயநகரில் தங்கியிருந்து, எழும்பூரில் ஒரு தனியாா் பயிற்சி மையத்தில் படித்து வந்தாா். மேலும், பகுதி நேரமாக உணவு விநியோகம் செய்யும் நிறுவனத்திலும் வேலை செய்து வந்தாா்.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கெளரிசங்கா் வேளச்சேரி 100 அடி சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த வாகனம், அங்கிருந்த சாலைத்தடுப்பின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த கெளரி சங்கா், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்து கிண்டி போக்குவரத்துப் புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.