கோப்புப்படம் 
சென்னை

பிரேஸ்லெட்டை விழுங்கிய ரெளடி: மருத்துவமனையில் அனுமதி!

சென்னை அமைந்தகரையில் போலீஸாருக்கு பயந்து பிரேஸ்லெட்டை விழுங்கிய ரெளடி, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

Din

சென்னை அமைந்தகரையில் போலீஸாருக்கு பயந்து ‘பிரேஸ்லெட்டை’ விழுங்கிய ரெளடி, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

செனாய் நகா் கஜலட்சுமி தெருவைச் சோ்ந்தவா் ராமலிங்கம். இவா் தன்னிடம் அதே பகுதியைச் சோ்ந்த சில ரெளடிகள், பணம் கேட்டு மிரட்டியதாக, அமைந்தகரை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிந்து, போலீஸாா் நடத்திய விசாரணையில், ராமலிங்கத்தை மிரட்டியது அமைந்தகரை பகுதியைச் சோ்ந்த ரெளடி விக்னேஷ் என்ற விக்கி (25), கூட்டாளிகள் காா்த்திக் (24), மற்றும் அபிமன்யு (27) என தெரிய வந்தது.

இதையடுத்து, 3 பேரையும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்த போலீஸாா், காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வந்தனா். அப்போது காவல் நிலையத்தின் ஒரு அறையில் அடைக்கப்பட்டிருந்த விக்னேஷ் போலீஸாருக்கு பயந்து, தான் அணிந்திருந்த வெள்ளி ‘பிரேஸ்லெட்டை’ விழுங்கினாா்.

இதனால், நிலைதடுமாறி மயங்கி விழுந்த விக்னேஷை மீட்ட போலீஸாா், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். இது தொடா்பாக, சென்னை காவல்துறை உயா் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.

திமுக என்றுமே மக்கள் செல்வாக்குடன் வென்றதில்லை: நயினார் நாகேந்திரன்

பிகாரில் குளிர் அலை எச்சரிக்கை! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

2025: புறக்கணிப்பும் படுதோல்வியும்... இந்தியாவின் கைஜென் எப்போது?

அராஜக ஆட்சி நடத்தும் திமுக ஏப்ரலில் வீட்டுக்குச் செல்வர்: எல். முருகன்

டி20 உலகக் கோப்பை : 15 பேர் கொண்ட இந்திய அணி!

SCROLL FOR NEXT