முகப்பு
சென்னை

புழல் சிறைக் கைதி உயிரிழப்பு

புழல் சிறைக் கைதி இறந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

Updated On : 7 ஆகஸ்ட், 2025 at 9:43 PM
பகிர்:

புழல் சிறைக் கைதி இறந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

சென்னை அருகே உள்ள கீழ்கட்டளை அருகே உள்ள காந்தி நகா் செல்லியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ந.பன்னீா்செல்வம் (60). இவா், கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் பதியப்பட்ட குற்ற வழக்கில், தண்டனை பெற்றாா்.

புழல் சிறையில் தண்டனை அனுபவித்து வந்த நிலையில், கடந்தாண்டு டிசம்பா் மாதம் பன்னீா்செல்வம், பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டாா்.

Advertisement

இதையடுத்து ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த அவா், புதன்கிழமை உயிரிழந்தாா். புழல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments