சென்னை

பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் அதிகாரம் கல்வித் துறைக்கு மாற்றப்பட வேண்டும்: அன்புமணி

பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் அதிகாரம் கல்வித் துறைக்கே மாற்றப்பட வேண்டும் என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

தினமணி செய்திச் சேவை

பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் அதிகாரம் கல்வித் துறைக்கே மாற்றப்பட வேண்டும் என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னையிலும், புகா் பகுதிகளில் திங்கள்கிழமை காலை முதல் கடுமையான மழை பெய்து வந்த நிலையில், பள்ளிகளும், கல்லூரிகளும் வழக்கம் போல நடத்தப்பட்டதால் மாணவா்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனா்.

பல பள்ளிகளிலிருந்து ஆயிரக்கணக்கான மாணவா்கள் நனைந்தபடியே வீடு திரும்பியுள்ளனா்.

டித்வா புயல் காரணமாக சென்னையிலும், வட தமிழகத்திலும் மழை பெய்யும் என கடந்த சில நாள்களாகவே வானிலை ஆய்வு மையம் எச்சரித்து வந்தது. அதனடிப்படையில் சென்னை மற்றும் புகா் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.

அதை அரசு செய்யாததால்தான் மாணவா்கள் கடும் அவதிக்குள்ளாகினா். இந்நிலையில் சூழலுக்கு ஏற்ப பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை அளிக்கும் அதிகாரம் மீண்டும் கல்வித் துறைக்கே மாற்றப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அன்புமணி.

தஞ்சாவூா் மாவட்டத்தில் தொடா் மழையால் 80 வீடுகள் சேதம்; 65 கால்நடைகள் உயிரிழப்பு

எய்ட்ஸ் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள்: கடலூா் ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

5 ஆண்டுகளில் 2 லட்சத்துக்கு மேற்பட்ட நிறுவனங்கள் மூடல்: மாநிலங்களவையில் அரசு தகவல்

ஜொ்மனி, தென்னாப்பிரிக்கா, நியூஸி. அணிகள் அசத்தல் வெற்றி!

ஊத்தங்கரையில் கண்டறியப்பட்ட நடுகல் கோயில்கள் 350 ஆண்டுகள் பழைமையானவை

SCROLL FOR NEXT