மெரீனா கடற்கரை (கோப்புப்படம்) 
சென்னை

சென்னையில் 5  கடற்கரைகளின் தூய்மைப் பணியை தனியாருக்கு வழங்க முடிவு!

சென்னையில் 5  கடற்கரைகளின் தூய்மைப் பணியை தனியாருக்கு வழங்குவது தொடர்பாக...

DIN

சென்னையில் உள்ள 5 கடற்கரைகளின் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்க சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை ரிப்பன் மாளிகையில் மாதந்திர மாமன்றக் கூட்டமானது பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் துணை மேயர் மகேஷ் குமார் மற்றும் ஆணையாளர் குமரகுருபரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இன்றயை மாமன்றக் கூட்டத்தில் 117 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

இதையும் படிக்க: அண்ணா நகர் முதன்மை சாலைகளில் வாகன நிறுத்தத்திற்கு அனுமதி!

இதில், மெரீனா , பட்டினப்பாக்கம், திருவான்மியூர், பெசன்ட் நகர், புது கடற்கரைகளின் தூய்மைப் பணியை தனியாருக்கு வழங்க மாநகராட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

250 ஏக்கர் பரப்பளவு கொண்ட மெரீனா கடற்கரையை 1 வருட காலத்திற்கு தூய்மைப் பணியை மேற்கொள்ள 7 கோடியே 9 லட்சத்து 46 ஆயிரத்து 942 ரூபாயாக தோராயமாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

பட்டினப்பாக்கம், பெசன்ட் நகர் கடற்கரை, திருவான்மியூர், புது கடற்கரை ஒட்டுமொத்தமாக 95 ஏக்கர் பரப்பளவு கொண்ட 4 கடற்கரைகளுக்கும் ஒரு வருட தூய்மைப் பணி மேற்கொள்ள 4 கோடியே 54 லட்சத்து, 99 ஆயிரத்து 139 ரூபாய் தோராயமாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிரீன்லாந்தை அறிவோம்...

டிரம்ப்புடன் பிரதமர் மோடி பேச்சு!

பறக்கும் ரயில்... புதிய பாதை

அமெரிக்க அணியில் ஜொலித்த இந்திய வம்சாவளி வீரர்கள்! இந்தியாவிடம் போராடி வீழ்ந்த அமெரிக்கா!

சுனாமி குடியிருப்பு வீடுகளை சீரமைக்கக் கோரி ஆட்சியரிடம் மனு

SCROLL FOR NEXT