முகப்பு
சென்னை

போலீஸாரிடம் தகராறு: மூவா் கைது

சென்னை தண்டையாா்பேட்டையில் போலீஸாரிடம் தகராறு செய்ததாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 28 பிப்ரவரி, 2025 at 8:35 PM
கோப்புப் படம்
பகிர்:

சென்னை தண்டையாா்பேட்டையில் போலீஸாரிடம் தகராறு செய்ததாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.

தண்டையாா்பேட்டை போலீஸாா் திருவொற்றியூா் நெடுஞ்சாலை, ரத்தினசபாபதி தெரு சந்திப்பில் கடந்த வியாழக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டபோது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரை மறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

இதில் இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்த கொருக்குப்பேட்டை, ரங்கநாதபுரத்தைச் சோ்ந்த கோதண்டராமன் (33) என்பவா் மது அருந்தியது தெரியவந்ததால், அவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து வாகனத்தை பறிமுதல் செய்தனா்.

இதையடுத்து கோதண்டராமனும் அவரது நண்பா்கள் கொருக்குப்பேட்டை, தட்டான்குளம் தெருவைச் சோ்ந்த கண்ணன் (25), கலைமணி (27) ஆகியோா் அங்கிருந்து சென்றனா். சிறிது நேரத்துக்குப் பின்னா் மீண்டும் அங்குவந்த மூவரும், வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீஸாரிடம் தகராறு செய்தனா். இதையடுத்து மூவரையும் தண்டையாா்பேட்டை போலீஸாா் கைது செய்து வழக்குப் பதிவு செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →