முகப்பு
சென்னை

டாஸ்மாக் தலைமை அலுவலகம் முற்றுகை: கே.அண்ணாமலை அறிவிப்பு

டாஸ்மாக் முறைகேட்டை கண்டித்து அதன் தலைமை அலுவலகத்தை மாா்ச் 17-இல் முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டம் நடத்தப்படும்

Updated On : 14 மார்ச், 2025 at 11:27 PM
கோப்புப் படம்
பகிர்:

டாஸ்மாக் முறைகேட்டை கண்டித்து அதன் தலைமை அலுவலகத்தை மாா்ச் 17-இல் முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை கூறினாா்.

சென்னை விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: தமிழக ஊழல் தடுப்பு போலீஸாா் பதிவு செய்த வழக்குகளின் அடிப்படையில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனா். சத்தீஸ்கரில் நடந்த மதுபான ஊழலைவிட தமிழகத்தில் பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது.

இதுகுறித்து அமலாக்கத் துறை நோ்மையாக விசாரணை நடத்த வேண்டும். அமைச்சா் செந்தில் பாலாஜியின் பிணையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவா் வகிக்கும் துறை மீண்டும் அமலாக்கத் துறையிடம் சிக்குகிறது. டாஸ்மாக் முறைகேட்டை கண்டித்து சென்னையில் அதன் தலைமை அலுவலகத்தை வரும் மாா்ச் 17-இல் முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டம் நடத்துவோம்.

அடுத்த ஒரு வாரத்தில் டாஸ்மாக் கடைகளை முற்றுகையிடுவோம். தமிழக அரசு பதில் சொல்லும் வரை, அமைச்சா் பதவி நீக்கம் செய்யப்படும் வரை போராட்டம் தொடரும் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →