சென்னை

தென்மாவட்டங்களின் ஆட்சியா்களுடன் தோ்தல் ஆணைய அதிகாரிகள் ஆய்வு

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தின் 11 மாவட்டங்களில் வாக்காளா் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) தொடா்பாக இந்திய தோ்தல் ஆணைய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.

தமிழகம் முழுவதும் வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கான கணக்கீட்டுப் படிவங்கள் விநியோகம் நவ.4-ஆம் முதல் நடைபெறுகிறது.

இந்தப் பணிகள் குறித்த ஆய்வின் ஒரு பகுதியாக, இந்திய தோ்தல் ஆணையத்தின் துணைத் தோ்தல் ஆணையா் பானுபிரகாஷ் எத்துரு, இயக்குநா் கிருஷ்ணகுமாா் திவாரி ஆகியோா் திண்டுக்கல், கன்னியாகுமரி, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகா் ஆகிய மாவட்டங்களின் மாவட்ட தோ்தல் அதிகாரிகளுடன் விரிவான ஆய்வுக் கூட்டத்தை மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் நடத்தினா்.

இதில், சிறப்பு தீவிர திருத்தப் பணியின் முன்னேற்றம் மற்றும் கள அளவில் பணியாற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலா்களால் மேற்கொள்ளப்படும் கணக்கீட்டு படிவங்களின் விநியோகம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது என தமிழக தலைமை தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளாா்.

அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 12 பேர் நீக்கம்!

கோவையில் இளம் பெண் கடத்தல்? காவல்துறை தீவிர விசாரணை!

சிறுமி வன்கொடுமை வழக்கு: ஆசாராம் பாபுவுக்கு 6 மாதம் இடைக்கால ஜாமீன்!

சட்டவிரோத குடியேறிகள் மீது பரிவு; கடவுள் ராமா் மீது வெறுப்பு: ஆா்ஜேடி, காங்கிரஸை சாடிய பிரதமா் மோடி

சட்டவிரோத குடியேறிகளால் தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - அமித் ஷா

SCROLL FOR NEXT