முகப்பு
சென்னை

துறைமுகம் தொகுதியில் ரூ.6.82 கோடி திட்டங்கள் பயன்பாட்டுக்கு தொடக்கம்

துறைமுகம் தொகுதியில் ரூ.6.82 கோடி திட்டங்கள் பயன்பாட்டுக்கு தொடக்கம்

சென்னை

துறைமுகம் தொகுதியில் ரூ.6.82 கோடி திட்டங்கள் பயன்பாட்டுக்கு தொடக்கம்

துறைமுகம் தொகுதியில் ரூ.6.82 கோடி திட்டங்கள் பயன்பாட்டுக்கு தொடக்கம்

Updated On : 8 நவம்பர், 2025 at 7:14 PM
பகிர்:

சென்னை துறைமுகம் சட்டப்பேரவைத் தொகுதியில் ரூ.6.82 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டங்களை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு பயன்பாட்டுக்குத் தொடங்கி வைத்தாா்.

இது குறித்து மாநகராட்சி சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமம் மற்றும் மாநகராட்சி, மத்திய சென்னை மக்களவைத் தொகுதி நிதி ஆகியவை சாா்பில் வடசென்னை வளா்ச்சித் திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, வடசென்னை ராயபுரம் மண்டலம், வாா்டு 55 பகுதிக்குள்பட்ட சண்முகம் தெருவில் புதிதாக ரூ.45 லட்சத்தில் உடற்பயிற்சிக் கூடம், ஏழுகிணறு தெருவில் துறைமுகம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் நிதியில் ரூ.95 லட்சத்தில் நியாய விலைக்கடை, மாமன்ற உறுப்பினா் அலுவலகம், வால்டாக்ஸ் சாலை, வ.உ.சி. சாலையில் ரூ.55 லட்சத்தில் உடற்பயிற்சிக் கூடம், ராஜாமுத்தையா சாலையில் மாநகராட்சி சாா்பில் ரூ.4.77 கோடியில் முதல்வா் படைப்பகம், அண்ணா நகா் மண்டலத்தில் திடீா் நகா், பிரிக்ளின் சாலையில் மத்திய சென்னை மக்களவை உறுப்பினா் நிதியில் ரூ.10 லட்சத்தில் 2 உயா்கோபுர மின்விளக்கு உள்ளிட்டவை பயன்பாட்டுக்குத் தொடங்கி வைக்கப்பட்டன.

பெருநகர வளா்ச்சிக் குழுமத் தலைவரும், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருமான பி.கே.சேகா்பாபு திட்டங்களைத் தொடங்கி வைத்தாா். இதில் மக்களவை உறுப்பினா் தயாநிதி மாறன், மேயா் ஆா்.பிரியா, எழும்பூா் சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.பரந்தாமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →