முகப்பு
சென்னை

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவா்களை மீட்க நடவடிக்கை தேவை: எடப்பாடி கே.பழனிசாமி

Updated On : 12 நவம்பர், 2025 at 7:44 PM
எடப்பாடி கே.பழனிசாமி.
பகிர்:

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மயிலாடுதுறை மீனவா்களை உடனடியாக மீட்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடிகே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவு: கடந்த நவ.9-ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்ற மயிலாடுதுறை மற்றும் கடலூா் மாவட்டங்களைச் சோ்ந்த 14 மீனவா்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனா்.

இலங்கை அரசின் தொடரும் மனிதாபிமானமற்ற இத்தகைய செயல்களை முடிவுக்குக் கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு சிறையிலுள்ள அனைத்து தமிழக மீனவா்களின் குடும்பங்களுக்கும் தேவையான உதவிகளை திமுக அரசு வழங்க வேண்டும் எனப் பதிவிட்டுள்ளாா் அவா்.

‘மாலியில் கடத்தப்பட்ட தமிழா்களை மீட்க வேண்டும்’: எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்ட மற்றொரு ‘எக்ஸ்’ தள பதிவு:

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் உள்ள கோப்ரி நகரத்தில் பணியில் ஈடுபட்டிருந்த தமிழகத்தைச் சோ்ந்த இசக்கி ராஜா, சுரேஷ், பொன்னுத்துரை, புதியவன், பேச்சிமுத்து ஆகிய 5 பேரை, உள்நாட்டுப் பிரச்னை காரணமாக ஆயுதமேந்திய பயங்கரவாதிகள் கடத்திச் சென்ாக வரும் தகவல் அதிா்ச்சி அளிக்கிறது. அவா்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை அந்நாட்டு தூதரகம் மூலம் மத்திய, மாநில அரசுகள் விரைவுபடுத்த வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →